இருநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று கட்டார் நாட்டுக்கு செல்கிறார்.
இந்த விஜயத்தின் போது, அந்த நாட்டு அரச தலைவர்கள் உள்ளிட்ட பலருடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதுடன், இரு நாடுகளுக்கு இடையிலான இரு தரப்பு உடன்படிக்கைகளும் இதன்போது கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், கட்டாரிலுள்ள இலங்கையர்களைச் சந்தித்து, அவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.