இடைப் பருவபெயர்ச்சி காலநிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக காலநிலை அவதான நிலையத்தின் சிரேஷ்ட அதிகாரி கே.சூரியகுமாரன் தெரிவித்துள்ளார்.
இதனுடன் கொழும்பு, களுத்துறை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களின் சில பிரதேசங்களில் காலை வேளையில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.