அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையிலான முக்கிய சந்திப்பு ஒன்று நடைபெறவுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் நிலவுகின்ற தடங்கல்கள் குறித்து இதன்போது ஆராயப்படவுள்ளது. இன்று மாலை அலரிமாளிகையில் இடம்பெறவுள்ள இந்த சந்திப்பில் நுவரெலியா மாவட்டத்தின் பிரதேச சபைகளது எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பாக முக்கிய அவதானம் செலுத்தப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.