புதிய அரசியலமைப்பு தொடர்பில் தெளிவுபடுத்துமாறு கோரி, அரசாங்கத்திற்கு வினாப்பட்டியல் ஒன்றை அனுப்பிவைக்க இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இது குறித்து அரசாங்கத்திடமிருந்து தெளிவான மற்றும் சரியான பதில்களை எதிர்பார்ப்பதாக அச்சங்கத்தின் தலைவர் யூ.ஆர்.டி. சில்வா தெரிவித்துள்ளதுடன், நேற்று இடம்பெற்ற இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் விஷேட கூட்டத்தின் போதே, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.