யாழ். முல்லை மாவட்டங்களுக்கு முன்னுரிமை

செய்திகள் முக்கிய செய்திகள் 1

வடக்கு, கிழக்கில் நிர்மாணிக்கப்படவுள்ள 50 ஆயிரம் வீடுகள் திட்டத்தில் யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளது.

தேசிய நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி தெரிவித்துள்ளதுடன், யுத்தத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் என்ற அடிப்படையில் குறித்த பகுதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் சுமார் 12 ஆயிரம் குடும்பங்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் வசித்து வருவதுடன், முல்லைத்தீவு மாவட்டத்திலும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதால், குறித்த வீட்டுத் திட்டத்தில் இந்த மாவட்ட முன்னுரிமை வழங்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஏனைய ஆறு மாவட்டங்களிளுக்கு அவசியமான முறையில் வீடுகளை அமைத்துக் கொடுக்கப்படவுள்ளதாகவும், இந்த திட்டம் தொடர்பான பயனாளிகள் தெரிவும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், கணவர்மாரை இழந்த பெண்கள், முன்னாள் போராளிகள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், விஷேட தேவையுடையோர் மற்றும் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்கள் என்ற வகைப்படுத்தலின் அடிப்படையில் தெரிவுசெய்யப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.