முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவிற்கு இன்று விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
சர்வதேச பௌத்த மற்றும் கலாசார சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வில் பங்கேற்பதற்கும் முதலாவதாக உரை நிகழ்த்துவதற்குமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியா செல்லவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவின் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளாரா, இல்லையா என்பது தொடர்பில் எந்தத் தகவல்களும் வெளியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.