சீனாவினால் ஆரம்பிக்கப்படவுள்ள துறைமுகப் பணிகள்

செய்திகள் முக்கிய செய்திகள் 1

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் பணிகள் அடுத்த மாதம் சீன நிறுவனத்தினால் ஆரம்பிக்கப்படுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதனூடாக கிடைக்கும் வருமானத்தின் ஊடாக நாட்டின் கடன் சுமையை படிப்படியாக செலுத்துவதற்கு எண்ணியுள்ளதாகவும், றைமுக அபிவிருத்தி பணிகளின் அடிப்படையில் தொழிற்சாலைகளை அமைப்பதற்கான சில காணிகளை சீன நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்குவதற்கும் திட்டமிட்டுள்ளதாக ஹம்பாந்தோட்டை - சீன நட்புறவு காரியாலயத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.