ஐ.நா சமாதான நடவடிக்கைகளில் இலங்கை பெண் இராணுவ அதிகாரிகள்

செய்திகள் முக்கிய செய்திகள் 2

ஐ.நாவின் சமதான நடவடிக்கைகளில் முதல் முறையாக இலங்கை பெண் இராணுவ அதிகாரிகள் ஈடுபடவுள்ளனர்.

மத்திய ஆபிரிக்காவின் சமாதான நடவடிக்கைகளுக்கான விஜயத்தை இலங்கை இராணுவ சேவைப் படையணியைச் சேர்ந்த மேஜர் திஷ்ந்தி மென்டிஸ், இலங்கை இராணுவ மகளிர்ப் படையணியைச் சேர்ந்த நிஷ்ந்தி லியனகே ஆகிய இருவரும் மேற்கொண்டு இவ்வாறு ஐ.நாவின் சமதான நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளனர்.

ஒரு வருட காலத்தைக் கொண்ட இந்தச் சமாதான நடவடிக்கைகளில், இலங்கை இராணுவத்தின் சார்பாக பங்கேற்கும் முதல் பெண் இராணுவ அதிகாரிகள் இவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.,