தனித்துப் போட்டியிடத் தீர்மானம்

செய்திகள் முக்கிய செய்திகள் 2

இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமது கட்சி தனித்துப் போட்டியிடவுள்ளதாக, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமது கட்சி தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பிலுள்ள பிரதான கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து செயற்பட முடியாமையால் இம்முறை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடவுள்ளதாக ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.