மாவீரர் துயிலும் இல்லத்திற்குள் சென்றவர்களும் இராணுவமும் முரண்பாடு

செய்திகள் முக்கிய செய்திகள் 1

கிளிநொச்சி, விஸ்வமடு பிரதேசத்தில் மாவீரர் துயிலும் இல்லம் உள்ள பகுதியை சுத்தம் செய்யச் சென்றவர்களுடன் அங்கிருந்த இராணுவத்தினர் முரண்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தப் பகுதி இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள நிலையில், எதிர்வரும் 27ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள மாவீரர் தினத்தை முன்னிட்டு, நேற்று குறித்த பகுதியில் சிரமதானம் செய்யச் சென்ற தமக்கு, இராணுவத்தினர் அனுமதியளிக்க மறுத்ததாக மக்கள் தெரிவிக்கின்றனர்.