2018ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம், நாளை சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், நாடாளுமன்ற வளாகத்தின் பாதுகாப்பு வியாழக்கிழமையும் வெள்ளிக்கிழமையும் பலப்படுத்தப்படுமென சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.
பொதுமக்கள் பார்வைக்கான பகுதி, விஷேட பிரதிநிதிகளுக்காக ஒதுக்கப்படும் எனவும் நாடாளுமன்றத்தில், சபாநாயகர் அறிவிப்பை நேற்று விடுக்கும் போது தெரிவித்துள்ளார்.