சீனாவின் கடற்படைக்கு சொந்தமான பயிற்சி கப்பலான க்யி ஜிகுயாங் எதிர்வரும் வெள்ளிக்கிழமையன்று இலங்கை வரவுள்ளது.
இந்த கப்பல் நான்கு நாட்கள் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருக்கும் எனவும், தாய்லாந்து உட்பட்ட நான்கு நாடுகளுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்தக்கப்பல் இத்தாலியில் இருந்து இலங்கைக்கு வருவதாகவும், கப்பலில் 549 கடற்படை வீரர்கள் பயணம் செய்வதாக, சீனத் தூதரகத்தின் செய்திக் குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.