நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த தேசிய வேலைத்திட்டம்

செய்திகள் முக்கிய செய்திகள் 1

இன்று உலகில் பெரும்பாலானவர்கள் பாதிக்கப்பட்டுள்ள தொற்றாத நோய்களில் முக்கிய நோயான நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதற்கு தேசிய வேலைத்திட்டமொன்று அவசியமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு, கொழும்பு காலிமுகத்திடலில் நேற்று (12) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய நீரிழிவுதின நடைபவனி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு ஜனாதிபதி தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், நீரிழிவு நோய் தொடர்பாக மக்களை அறிவூட்டும் நோக்குடன், நீரிழிவு நோய் மாதமொன்றைப் பிரகடனப்படுத்தி, நாடளாவிய ரீதியில் அனைத்து வைத்தியசாலைகள், சுகாதார மருத்துவ அலுவலகங்களின் மருத்துவர்கள், ஊழியர்களின் பங்குபற்றுதலுடன் அம்மாதத்தில் நாடளாவிய தேசிய நிகழ்ச்சித் திட்டமொன்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், பல்வேறு நிறுவனங்களால் சந்தைக்குவரும் பால் பக்கெட்டுகளில் உள்ளடங்கியுள்ள சீனியின் அளவைக் காட்சிப்படுத்துவதற்கும், கடந்த வரவு -செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட மென்பானங்களுக்கான வரியை நடைமுறைப்படுத்துவதற்கான தேவையையும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, மக்களின் சுகாதாரத்துக்குப் பாதிப்பான இத்தகைய உற்பத்திகள் தொடர்பான தீர்மானங்கள் குறித்து, எதிர்காலத்தில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.