வேறு கட்சிகள் அல்லது அமைப்புக்களின் தனிப்பட்ட தேவைகளுக்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பலிகொடுக்கப் போவதில்லையென கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இரத்மலானையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளதுடன், சில தரப்பினர் தனிப்பட்ட சில தொடர்புகளுக்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை காட்டிக்கொடுப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.