வடக்கு, கிழக்கில் 50 ஆயிரம் கல் வீடுகளை அமைக்கும் திட்டத்தின் கேள்விப் பத்திரங்களுக்கான மதிப்பீட்டுப் பணிகள் துரிதப்படுத்தபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
தேசிய நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளர் வீ.சிவஞானசோதி இதனைத் தெரிவித்துள்ளதுடன், வடக்கு, கிழக்கில் வீதிகளை நிர்மாணிப்பதற்கான வேலைத்திட்டத்துக்கான கேள்விப்பத்திர கோரலுக்கான விளம்பரப்படுத்தல் விரைவில் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.