ஜனநாயக செயற்பாடுகளுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு

செய்திகள் முக்கிய செய்திகள் 1

உள்ளூராட்சி மன்ற தேர்தலை ஒத்திவைக்கும் ஜனநாயக விரோத செயற்பாட்டிற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு உடந்தையாக இருப்பதாக முன்னிலை சோஷலிச கட்சியின் தலைவர் குமார் குணரத்னம் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

ஹட்டனில் நேற்று இடம்பெற்ற கட்சியின் கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளதுடன், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைப்பதற்கான உண்மையான காரணம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினருக்கும், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினருக்கும் இடையில் நடக்கும் முரண்பாடே காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.