சாவகச்சேரியில் வாள்களுடன் இருவர் கைது

செய்திகள் முக்கிய செய்திகள் 1

சாவகச்சேரி, மட்டுவில், சிவன்கோவில் வீதியில், வாள்களுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சாவகச்சேரி பொலிஸ் நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விஷேட சுற்றிவளைப்புக்களின் போதே இந்த இரு இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சந்தேகநபர்கள் அனுமதிப்பத்திரமின்றி மோட்டார் சைக்கிளில் பயணித்ததாகவும், ஏதேனும் குற்றச் செயலைப் புரிவதற்காகவே அவர்கள் சென்றிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இவர்கள் சாவகச்சேரியைச் சேர்ந்த 21 மற்றும் 22 வயதானவர்கள் எனவும், சந்தேக நபர்களை இன்று சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளதுடன், இது குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.