ஹம்பாந்தோட்டை துறைமுக பணியாளர்களின் பிரச்சினை தொடர்பாக குறித்த நிறுவனத்துடன் கலந்துரையாடல் மேற்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
துறைமுகத்தின் பணியாளர்கள் பலர் ஒரே தடவையில் அகற்றப்பட்டமை சட்டவிரோதமான விடயமென தங்காலை கால்டன் இல்லத்தில் இடம்பெற்ற சமய நிகழ்வின் பின்னர் செய்தியாளர்களின் பேசிய போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.