சிவனொளிபாதமலை பருவகாலம் நேற்று பௌர்ணமி தினத்துடன் ஆரம்பமான நிலையில், முதல் தினத்திலேயே 7.55 கிராம் கஞ்சா போதைப்பொருள் கொண்டு சென்ற நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய மாகாண கலால் திணைக்கள ஆணையாளர் காமினி அதிகாரி, நுவரெலியா கலால் திணைக்கள அதிகாரி உபுல் செனவிரத்தன, ஹட்டன் கலால திணைக்கள அதிகாரி திலக்கரத்னவின் வழிகாட்டலில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே நோட்டன் பிரிஜ், தியகல பிரதேசங்களில் வைத்து இவர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் புஸ்ஸால்லாவ பகுதியில் இருந்து சிவனொளிபாத மலையினை தரிசிக்க வருகை தந்தவர்கள் என்றும், கைது செய்யப்பட்டவர்களை இன்று ஹட்டன் நீதவான் முன்னலையில் ஆஜர் செய்யப்படவுள்ளதாகவும் கலால் திணைக்களத்தின் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.