சர்வதேச நாணய நிதியம் அடுத்தகட்ட கடன் தொகையான 251.4 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்க அனுமதியளித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிதியத்தின் நிறைவேற்று சபை, நிதி வழங்கல் வசதி தொடர்பான உடன்படிக்கையை 3ஆவது முறையாக ஆராய்ந்த பின்னர் தமது இணக்கப்பாட்டை தெரிவித்துள்ளது.