தேர்தலுக்கு தயாராகிறார் பிரதமர்
20,000 அபிவிருத்தி உதவியாளர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சிற்காக இவ்வாறு 20,000 அபிவிருத்தி உதவியாளர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும், புதிய அதிகாரிகள் பல்வேறு துறைகளுக்காக சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கம் பெற்றுக் கொண்டிருந்த கடன் தொகைகள் இரண்டு ஆண்டுகளில் பாரியளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இந்த அரசாங்கத்தின் பயணம் மெதுவானது என்ற போதிலும் நிதானமானதெனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
Continue Reading