1,532 துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவு

செய்திகள் முக்கிய செய்திகள் 1

இவ்வருடத்தின் முதல் இரண்டு மாதங்களுக்குள் மாத்திரம் 1,532 சிறுவர் துஷ்பிரயோகங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

பாலியல், உளவியல், உடலியல் மற்றும் புறக்கணிப்பு உள்ளிட்ட பல்வேறு வழிகளில் சிறுவர்கள் இவ்வாறு துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.