இலங்கை அகதி கைது

செய்திகள்

தனுஷ்கோடி ஊடாக இலங்கைக்கு தப்பிச் செல்ல முயற்சித்த இலங்கை அகதி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

கொழும்பைச் சேர்ந்த 50 வயதுடைய அவர், தனுஷ்கோடியிலிருந்து நாட்டுப்படகில் தப்பிச் செல்ல முற்பட்ட கொழும்பைச் சேர்ந்த 50 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த 2007ஆம் ஆண்டு விமானம் மூலம் சென்னை சென்றுள்ள அவர், வெளிப்பதிவில் தங்கி இருந்த நிலையில், இலங்கைக்கு தப்பித்துச் செல்ல முயற்சித்ததாகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.