ஊர்காவற்றுறைப் பிரதேச சபையின் புதிய நிர்வாகம் கூடியது

செய்திகள் முக்கிய செய்திகள் 1

ஊர்காவற்றுறைப் பிரதேச சபையின் புதிய ஆட்சிக்காலம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் மருதயினார் ஜெயகாந்தன் தலைமையில் நேற்று ஆரம்பமானது

ஆட்சியமைக்க தேவையான ஆசனங்களை பெற்ற சபைகளின் செயற்பாடுகள் 20 ஆம் திகதி; ஆரம்பிக்கப்பட வேண்டும் என்ற உள்ளுராட்சி மன்ற ஆணையத்தின் அறிவிப்புக்கு இணங்க இன்று குறித்த சபையின் புதிய தவிசாளராக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜெயகாந்தன் மீண்டும் பதவியேற்றார்.

நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் யாழ் மாவட்டத்தில் எந்தவொரு கட்சியும் ஆட்சியமைக்க தேவையான ஆசனங்களை பெற்றுக்கொள்ளாத நிலையில் ஈ.பி.டி.பி ஊர்காவற்துறை பிரதேச சபையில்; ஆட்சியமைக்கத் தேவையான ஆசனங்களை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.