ஐ.தே.கவுடன் உறவை முறிக்கிறதா ஸ்ரீ.மு.கா.?

செய்திகள் முக்கிய செய்திகள் 1

தமக்கு நடந்த நம்பிக்கை மோசடிகளை பார்க்கின்றபோது, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இனியும் இணைந்து பயணிப்பது என்பது மிகவும் கஷ்டமான விடயமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கட்சியின் சார்பாக தெரிவான உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு கட்சித் தலைமையகமான தாருஸ்ஸலாமில் நேற்று மாலை நடைபெற்ற போது அதில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கடந்த 03 வாரங்களாக சிறிகொத்தவில் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களை சந்திந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போதிலும், அதன் பின்னர் நடந்த விபரீதங்களையும் வைத்து பார்க்கின்றபோது, இனியும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பயணிப்பது என்பது மிகவும் கஷ்டமான விடயம் என்றும், முஸ்லிம் காங்கிரஸ் வெற்றியீட்டிய சபைகளில், தம்மைப் புறந்தள்ளிவிட்டு மாற்று அணிகளுடன் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியமைத்தால் அரசியல் ரீதியாக அதற்கு தகுந்த பதிலடி கொடுப்போம் என்றும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.