சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நலின் ருவன்ஜீவ பெர்ணான்டோவை எதிர்வரும் 12ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சந்தேகநபரை இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்திய போதே நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
சந்தேகநபரான நலின் ருவன்ஜீவ பெர்னாண்டோ கடந்த 6ஆம் திகதி நிதி குற்றவியல் விசாரணை பிரிவினாரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.