கஜமுத்துக்களுடன் மூவர் கைது

செய்திகள் முக்கிய செய்திகள் 2

70 இலட்சம் ரூபா பெறுமதியான கஜமுத்துக்களுடன் சந்தேகநபர்கள் மூவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புத்தளம் பிரதேசத்தில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேரும் மற்றும் ஒரு சந்தேகநபருடன் நேற்றைய தினம் தம்புள்ளை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

யால தேசிய வனப் பகுதியிலிருந்து யானையொன்றை கொன்று குறித்த கஜமுத்துக்களைப் பெற்றுகொண்டதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.