அர்ப்பணிப்புடைய அரசியல்வாதிகள் தேவை

செய்திகள் முக்கிய செய்திகள் 2

நாட்டினுள் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பு போதுமானதாக இல்லையெனின் முதலீட்டாளர்கள் இந்நாட்டிற்குள் முதலீடு செய்ய வரமாட்டார்களென முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பதுளையில் இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், நாட்டை முன்னேற்ற திறமையான மற்றும் அர்ப்பணிப்புடன் செயற்படும் அரசியல்வாதிகள் உருவாக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.