நீர்நிலைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு

செய்திகள் முக்கிய செய்திகள் 2

நாட்டில் பெய்துவரும் அடைமழையினால் நில்வளா, கிங், களு, களனி, அத்தனகலு ஓயா மற்றும் மா ஓயா ஆகியவற்றின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதனால் குறித்த நீர்நிலைகளை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் மக்களை மிகவும் அவதானத்துடனும் எச்சரிக்கையுடனும் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.