சுமார் 68,343 பேர் பாதிப்பு

செய்திகள் முக்கிய செய்திகள் 1

18 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலைக் காரணமாக இதுவரை 68,343 இற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன், குறித்த அனர்த்தங்களால் 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும், கேகாலை, பொலன்னறுவை, காலி, புத்தளம் மற்றும் மொனராகலை மாவட்டங்களிலேயே இவ்வாறு உயிரிழப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், மின்னல் தாக்கத்தின் காரணமாக நால்வரும், கடும் காற்றினால் மூவரும், மண்மேடு சரிவினால் ஒருவரும், நீரில் அடித்துச் செல்லப்பட்டு ஒருவரும் உயிரிழந்துள்ளதாக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அனர்த்தங்களால் 18 மாவட்டங்களைச் சேர்ந்த 18,079 குடும்பங்களைச் சேர்ந்த 68,343 பேர் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளதாகவும், குறித்த சீரற்ற காலநிலையால், 25 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், 1464 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய, தற்சமயம் 168 தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், இவற்றில் 6,710 குடும்பங்களைச் சேர்ந்த 24,187 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.