யுவதியை கடத்தி சென்ற பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் கைது

செய்திகள் முக்கிய செய்திகள் 1

பொல்பித்திகம பஸ் நிலையத்தில் நின்றிருந்த யுவதி ஒருவரை வீட்டுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்று தாக்கி பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபரொருவர் பிரதேசவாசிகளால் தாக்கப்பட்ட நிலையில், குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருவதாக பொல்பித்திகம பொலிஸார் தெரிவித்தனர்

இவரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் யுவதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கணினி வகுப்பில் கலந்து கொண்டு வீட்டுக்கு செல்வதற்காக பொல்பித்திகம பிரதேசத்தில் உள்ள பஸ் தரிப்பிடத்தில் குறித்த யுவதி காத்திருந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் யுவதியை வீட்டுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி அவரை அழைத்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரவு வெகுநேரமாகியும் பஸ் வராத காரணத்தினால் குறித்த யுவதி மோட்டார் சைக்கிளில் ஏறிய போது குறித்த நபர் யுவதியை வலுக்கட்டாயமாக தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதையடுத்து அந்த யுவதியை வீட்டினுள் இழுத்துச் சென்றதாகவும், அவரிடமிருந்து தப்பிக்க முற்பட்ட போது, ​​குறித்த நபர் யுவதியை தாக்கி பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதன்போது யுவதியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து அந்த நபரை பிடித்து அடித்து, பொல்பித்திகம பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான அவர் முதலில் பொல்பித்திகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொல்பித்திகம பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.