விளையாட்டு பயிற்றுவிப்பாளர் நியமனம் என்ன நிலை ? – திருகோணமலை இளைஞ்ஞார்கள்.

செய்திகள் முக்கிய செய்திகள் 2

விளையாட்டு பயிற்றுவிப்பாளர் நியமனத்தை விரைவாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து திருகோணமலையில் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்று இருந்தது .

குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது, கிழக்கு மாகாண ஆளுநரிடம் மகஜர் ஒன்றும் கைளிக்கப்பட்டது.

விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களாக தெரிவுசெய்யப்பட்டோர் கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்துக்கு முன் இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.

இதன்போது, கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் அசங்க அபேவர்த்தனவிடம் மகஜர் கையளிக்கப்பட்டு விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களாக தெரிவு செய்யப்பட்டோரின் நியமனத்தை துரிதப்படுத்த வேண்டுமென பணிப்புரை விடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மகஜரில் குறிக்கப்பட்டு இருந்தது ,

அரச பாடசாலைகளில் விளையாட்டு துறையினை விருத்தி செய்ய வேண்டும் என்ற நோக்குடன் கல்வியமைச்சானது அரச பாடசாலைகளில் காணப்படும் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் 3.850 வெற்றிடங்களை நிவர்த்தி செய்ய நாடளாவிய ரீதியில் பாடசாலை மட்டங்களில் விளையாட்டுத் துறையில் தேசிய, மாகாண மட்டங்களில் சாதனை புரிந்தவர்களிடம் விண்ணப்பம் கோரி தகமை அடிப்படையில் 3.850 பேரை தெரிவு செய்திருந்தது.

கல்வி அமைச்சு கோரிய தகமை அடிப்படையில் கல்வியமைச்சினால் தெரிவு செய்யப்பட்டோர் கடந்த வருடம் நேர்முகத் தேர்விற்கு தெரிவு செய்யப்பட்டனர்.

நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகமையுடைய விண்ணப்பதாரிகள் உடற்தகமை தேர்விற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

கடந்த 2017இல் உடற்தகமை தேர்வு இடம்பெற்றிருந்தாலும் இந்த வருடம் ஜுன் மாதமளவில் நியமத்துக்கான பெயர்பட்டியலை கல்வியமைச்சு மாகணங்களுக்கு அனுப்பி இருந்தது.

விளையாட்டு பயிற்றுவிப்பாளர் நியமனமானது ஜூன் மாதம் 25ஆம் திகதி வழங்குவதற்காக கல்வியமைச்சினால் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தும் சில மாகாணங்கள் இழுபறியினால் அந்நியமனம் கொடுபடாமல் இன்றுவரை எந்த தீர்மானமும் இன்றி இழுத்தடிப்பு செய்யப்பட்டுள்ளது.

குறித்த நியமனத் தாமதத்தால் 3850 இளைஞர்,யுவதிகள் தங்கள் அன்றாட வாழ்வில் பல இன்னல்களை எதிர் நோக்குகின்றனர்.

ஏற்கனவே செய்த தொழில்களை விட்டு விளையாட்டு பயிற்றுவிப்பாளர் நியமனத்துக்காக காத்திருக்கின்றனர்.

இரண்டு மாதங்கள் கடந்தும் நியமனம் குறித்தான பல செய்திகள் வெளியாகி உள்ளன.குறித்த நியமனம் அரசினால் இரத்து செய்யப்பட்டு விட்டதாகவும் பொய்ப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறதான குறிப்பிடப்பட்டுள்ளத