மன்னாரில் கிணற்றில் வெடிபொருட்கள் மீட்பு!

செய்திகள்

மன்னார், முருங்கன் கட்டுக்கரை கோர மோட்டை பகுதியில் கைவிடப்பட்டிருந்த காணியினை அதன் உரிமையாளர் சுத்தம் செய்துள்ள போது குறித்த காணியில் காணப்பட்ட கிணற்றில் இருந்து ஆபத்தை விளைவிக்கும் வெடி பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இது தொடர்பில் வீட்டின் உரியையாளர் உடனடியாக முருங்கன் பொலிஸ் நிலையத்தில் இன்றைய தினம் முறைப்பாடு செய்தார்.

குறித்த முறைப்பாட்டினை தொடர்ந்து குறித்த பகுதிக்கு சென்ற பொலிஸார் மிகவும் ஆழமாக காணப்பட்ட குறித்த கிணற்றில் அதிகமான வெடி பொருட்கள் வெடிக்காத நிலையில் இருப்பதை அவதானித்து குறித்த இடத்தில் பாதுகாப்பிற்கு மேலதிக பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்தியுள்ளதுடன் உடனடியாக குறித்த சம்பவம் தொடர்பாக மன்னார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு முருங்கன் பொலிஸார் தெரியப்படுத்தியுள்ளனர்.

குறித்த கிணற்றினுள் உள்ள அனைத்து வெடி பொருட்களையும் மிகவும் பாதுகாப்பாக அகற்றி அவற்றை செயலிழக்கச் செய்யும் நடவடிக்கைகளில் மன்னார் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.