யாழில் பொலிஸாருக்கு பதற்றத்தை ஏற்படுத்திய மறும நபர்கள்…!!

செய்திகள்

யாழ்ப்பாணம் - கொடிகாமம் காவல் நிலையத்திற்கு சொந்தமான ஜீப் வண்டியினை கடத்தி சென்றதாக தெரிவிக்கப்படும் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

பாலாவிப் பகுதியில் தொடர்ச்சியாக மணல் கடத்தல் இடம்பெற்று வருவதனால் அதனைத் தடுப்பதற்கு அங்கு காவல் துறையினர் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது காவல் துறையினரின் வாகனத்தை இனந்தெரியாதோர் கடத்திச் சென்றுள்ளனர்.

குறித்த வாகனத்திற்குள் காவல் துறையினரின் ஆயுதங்களும் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜீப் வாகனத்துடன் நின்ற காவல் துறை உத்தியோகத்தர்களை தாக்கிவிட்டே வாகனத்தைக் கடத்திச் சென்றுள்ள நிலையில் மேலும் அதிரடியாக காவற்துறையின் களமிறக்கப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஆயுதங்களுடன் கடத்திச் செல்லப்பட்ட வாகனம் கொடிகாமம் ஆலடிப் பகுதியில் மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த பகுதியில் பதற்றநிலைமை ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.