இளைஞர்கள் நால்வர் எல்லே நீர்வீழ்ச்சியில் உயிரிழப்பு!

செய்திகள் முக்கிய செய்திகள் 2

அம்பாறை மாவட்டத்திலிருந்து இன்று (21) அதிகாலை வெல்லவாய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எல்லேக்கு குளிக்கச் சென்ற 10 இளைஞர்களில் நால்வர் மரணமடைந்துள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

செவ்வாய்கிழமை, (21) ஆம் திகதி அதிகாலையில் அம்பாறை மாவட்டம் கல்முனை, சாய்ந்தமருது மற்றும் சம்மாந்துறைப் பிரதேசத்தைச் சேர்ந்த 10 இளைஞர்களே இவ்வாறுகுளிக்கச் சென்றுள்ளனர்.

இவர்களுள் (21-22) வயதிற்கும் இடைப்பட்ட 04 இளைஞர்கள் மரணமடைந்துள்ளனர்.

இவர்களில் கல்முனை பிரதேசத்தைச் சேர்ந்த இருவரும், சம்மாந்துறை மற்றும் சாய்ந்தமருதைச் சேர்ந்த இருவருமே இவ்வாறு மரணமடைந்துள்ளனர்.

இம்மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவாய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.