குவைட்டில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கிய 48 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

முக்கிய செய்திகள் 3

தொழிலுக்காக குவைட்டிற்கு சென்று பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கிய 48 இலங்கையர்கள் இன்றைய தினம் நாடு திரும்பியுள்ளனர்.

இலங்கை விமான சேவைக்கு சொந்தமான யு எல் 230 என்ற விமானத்தில் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர் என கட்டுநாயக்க விமான நிலையத்துக்கான எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குவைட்டுக்கு தொழிலுக்காக சென்று பல்வேறு சிரமங்களை எதிர்கொண்ட இலங்கையர்கள் குவைட்டுக்கான இலங்கை தூதரகத்திற்கு அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் இலங்கைக்கான தூதரகத்தின் நடவடிக்கையால் 48 இலங்கையர்களும் இன்று நாடு திரும்பியுள்ளனர்.

38 பெண்களும் 10 ஆண்களுமே இவ்வாறு நாடு திரும்பியுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.