
யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் அமைந்துள்ள பிரபல தனியார் விடுதிக்குள் நுழைந்த இருவர் விடுதிக் கணக்காளரை சரமாரியாக தாக்கிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை காலை 11மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலுக்கான காரணம் தெரியவராத நிலையில் பட்டபகலில் விடுதிக்குள் நுழைந்து கணக்காளரை தாக்கியமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.