பிரதமரின் வெசாக் தின வாழ்த்து

செய்திகள் முக்கிய செய்திகள் 2

நல்லெண்ணத்துடன் உலகைக் காணும், கருணையுடன் வாழக்கூடிய ஒற்றுமையான சமூகம் ஒன்றை கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தொவித்துள்ளர்.

வெசாக் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் பிரதமர் இதனை தெரிவித்துள்ளதுடன், உலகவாழ் பௌத்த மக்களின் மிகவும் புனிதமான சமய முக்கியத்துவம்மிக்க தினமான வெசாக் நிகழ்வு, புண்ணிய கருமங்கள் உட்பட சமய வழிபாடுகளில் ஈடுபட்டு மிகவும் பக்தியுடன் கொண்டாடப்படும் தனிச்சிறப்புமிக்க சமய நிகழ்வு என்றும் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் 14ஆவது சர்வதேச வெசாக் தின நிகழ்வு மற்றும் உலக பௌத்த மாநாடு என்பவற்றை நடாத்த கிடைத்தமை சிறந்ததொரு சந்தர்ப்பம் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளர்.