பண்டிகை காலத்திற்கு தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளது: கஞ்சன

செய்திகள் முக்கிய செய்திகள் 2

கொழும்பு,மார்ச் 29

தொடர்ந்து எரிபொருள் விநியோகம் உறுதிசெய்யப்படும் எனவும், புத்தாண்டு காலத்திற்கு தேவையான அளவு எரிபொருள் கையிருப்பில் வைக்கப்படும் எனவும் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

குறித்த எரிபொருள் சேமிப்பு நிலையங்களில் எரிபொருள் பராமரிக்கப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்