யாழ்ப்பாணத்தில் நேற்று பெய்த கடும் மழையால் 55 குடும்பங்கள் பாதிப்பு

செய்திகள் முக்கிய செய்திகள் 2

யாழ்ப்பாணத்தில் நேற்று நிலவிய காற்றுடன் கூடிய மழை தாக்கத்தின் காரணமாக 17 குடும்பங்களைச் சேர்ந்த 55 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு உதவிப் பணிப்பாளர் என்.சூரியராஜ் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் நேற்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை கடும் காற்றுடன் கூடிய காலநிலை நிலைகாணப்பட்டதாகவும் இதன் தாக்கத்தினால் 17 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்ததாகவும் மூன்று சிறு தொழில் முயற்சியாளர்கள் பாதிப்படைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

குறித்த பாதிப்புகள் தொடர்பான விவரங்கள் சகல பிரதேச செயலகங்கள் ஊடாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினரால் சேகரிக்கப்பட்டு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை நேற்று இரவு பல பிரதேசங்களிலும் மின்சாரம் தடைப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.