யாழில் தொற்று அதிகரிப்பதற்கான அதிர்ச்சி காரணத்தை வெளியிட்ட யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி

சிறப்புச் செய்திகள் செய்திகள் முக்கிய செய்திகள் 2

யாழ் மாவட்ட மக்களின் செயற்பாடுகளாலேயே யாழில் தொற்று அதிகரிப்பதாக யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா தெரிவித்தார்

இன்றைய தினம் யாழ்ப்பாணம் நாவற்குழி கொரோனா இடைத்தங்கல் சிகிச்சை நிலையத்தினை திறந்து வைத்தபின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த காலத்தை விட தற்பொழுது தொற்று அதிகரிக்கும் நிலை காணப்படுகின்றது யாழ்ப்பாண மாவட்டத்திலே சில ஆலயங்களில் சுகாதார பிரிவினரின் கட்டுப்பாடுகளை மீறி ஆலய உட்சவங்கள் நடத்தப்பட்டமையாலேயே தொற்றுநிலைமை அதிகரித்தது

தற்போதும் சில இடங்களில் திருமண நிகழ்வுகள் வீடுகளில் சுகாதார பிரிவின் அனுமதி இல்லாமல் மேற்கொள்ளப்படுகின்றது எனவே மக்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் இந்த பயணத்தடை என்பது மக்களை தொற்றிலிருந்து பாதுகாப்பதற்காகவே எனவே பொதுமக்கள் இந்த பயணத்தடைகாலத்திலாவது சுகாதாரப் பிரிவினரின் கட்டுப்பாடுகளுடன் வீடுகளில் இருப்பது மிகவும் சிறந்ததாகும்

எனவே யாழ்ப்பாண மாவட்டத்தில் பொதுமக்கள் சுகாதார பிரிவினருடன் இணைந்து யாழ் மாவட்டத்தில் தொட்டிலை இல்லாதொழிக்க உதவ முன்வரவண்டும் என யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா தெரிவித்தார் ..