“பாராளுமன்ற உறுப்பினர்கள் சம்பளத்தை அர்ப்பணிக்க வேண்டும்”

முக்கிய செய்திகள் 2

தற்போதைய கொரோனா நிலமையில் மக்கள் மட்டும் கஷ்டப்பட்டு செயல்பட வேண்டும் என அறிவிப்பது எவ்விதத்திலும் பொருத்தமானதல்ல என வணக்கத்திற்குரிய எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார்.

எனவே, பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் சம்பளத்தை மக்களுக்காக அர்ப்பணிப்பு செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர்களுக்கு மாதாந்த சம்பளமாக பாரிய அளவான தொகை கிடைக்கின்ற நிலையில் அவர்கள் செய்யும் அர்ப்பணிப்பு என்ன என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.