யாழில் இராணுவத்தின் 6 ஹெக்டேர் பச்சைமிளகாய் தோட்டம்

செய்திகள் முக்கிய செய்திகள் 2

யாழ்ப்பாணத்தில் ராணுவ வீரர்களால் 6 ஹெக்டேர் நிலப்பரப்பில் மிளகாய் பயிரிடப்பட்டுள்ளது.

பாதுகாப்புப் படைகளின் தளபதி - யாழ்ப்பாணம், மேஜர் ஜெனரல் பிரியந்தா பெரேராவின் மேற்பார்வை மற்றும் அறிவுறுத்தலின் கீழ், இந்த மிளகாய் பயிரை ராணுவ வீரர்கள் பயிரிட நடவடிக்கை எடுத்தனர்.

தற்போது மிளகாய் பயிர் அறுவடை செய்யப்படுவதாகவும், இந்த ஆண்டு அறுவடை மிகவும் வெற்றிகரமாக நடைபெறுவதாகவும் தெருவிக்கப்படுகிறது.

பாதுகாப்புப் படைத் தலைமையகம் (SFHQ-யாழ்ப்பாணம்) துருப்புக்களின் தேவைகளுக்கும், எதிர்காலத்திலும் சந்தைக்கு மிளகாய் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.