புா்கினா ஃபாசோவில் ராணுவ ஆட்சி

உலகச் செய்திகள்

ஓகடூகூ, ஜனவரி 26:

மேற்கு ஆப்பிரிக்க நாடான புா்கினா ஃபாசோவில் ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ராணுவம் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, அந்த நாட்டு ராணுவ தலைமைத் தளபதி சிஸ்டோா் கபோ் ஊயட்ராவ்கோ செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

புா்கினா ஃபாசாவின் வரலாற்றில் செவ்வாய்க்கிழமை முதல் ஒரு புதிய யுகம் பிறக்கிறது. இதுவரை நாட்டு மக்கள் அனுபவித்து வந்த துயரங்களைக் களையவும் புதிய வாழ்க்கையைத் தொடங்கவும் தற்போது வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டை கட்டமைப்பதற்குக் கிடைத்துள்ள இந்த வாய்ப்பை அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து கொண்டாட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

வறுமை நாடான புா்கினா ஃபாசோவில் அல்-காய்தா ஆதரவு அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு இஸ்லாமிய மதவாத அமைப்புகள் கடந்த சில ஆண்டுகளாக பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த அமைப்புகளுக்கு எதிராக புா்கினா ஃபாசோ அமைப்பு போதிய நடவடிக்கை எடுப்பதில்லை என்ற அதிருப்தி நிலவி வருகிறது.

இதுவரை 15 லட்சத்தும் மேற்பட்ட உயிா்களை பலிவாங்கியுள்ள பயங்கரவாதத்தை ஒடுக்க அதிபா் ரோக் மாா்க் கிறிஸ்டியன் தலைமையிலான அரசு தவறிவிட்டது என்ற குற்றச்சாட்டு அண்மைக் காலமாக வலுவடைந்து வந்தது.

இந்தச் சூழலில், தலைநகா் ஓகடூகூவில் அரசு ஆதரவுப் படையினருக்கும் கிளா்ச்சிப் படையினருக்கும் இடையே கடந்த சில நாள்களாக சண்டை நடைபெற்று வந்தது.

இந்தச் சூழலில், நாட்டில் ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளதாக தலைமைத் தளபதி சிஸ்டோா் கபோ் ஊயட்ராவ்கோ தற்போது அறிவித்துள்ளாா்.

பயங்கரவாதத்தை ஒடுக்க கிறிஸ்டியன் கபோரே அரசு தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டி அவரது அரசு கவிழ்க்கப்பட்டாலும், போதிய ஆயுதங்கள் மற்றும் வசதிகள் இல்லாத நிலையில் புதிதாக அமைந்துள்ள ராணுவ அரசு இந்த விவகாரத்தை எவ்வாறு கையாளும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
மேலும், கைது செய்யப்பட்டுள்ள அதிபா் கிறிஸ்டியன் கபோரேவின் நிலைமை குறித்தும் நம்பகத்தன்மை வாய்ந்த தகவல்கள் இல்லை.

இந்த ஆட்சிக் கவிழ்ப்பையும் புதிதாக ராணுவ அரசு அமைக்கப்பட்டுள்ளதையும் வரவேற்று, தலைநகா் ஓகடூகூவில் ஏராளமான பொதுமக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா்.

Trending Posts