நாட்டில் அதிக விலைக்கு முட்டை விற்பனை!

செய்திகள் முக்கிய செய்திகள் 2

நாடளாவிய ரீதியில் பல வியாபாரிகள் தொடர்ந்தும் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு மேல் முட்டைகளை விற்பனை செய்வதாக நுகர்வோர் முறைப்பாடு தெரிவிக்கின்றனர்.
பல வியாபாரிகள் ஒரு முட்டையை 47 ரூபா தொடக்கம் 60 ரூபா வரை அதிக விலைக்கு விற்பனை செய்து வாடிக்கையாளர்களை ஏமாற்றி வருவதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்நாளில் சந்தையில் முட்டைக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அவர்கள் கூறுகின்றனர்.

அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்வது தொடர்பாக நுகர்வோர் ஆணையம் நடத்திய விசாரணையில், அதிக விலைக்கு முட்டை விற்கும் வியாபாரிகளை கண்டறிய சோதனை நடத்தப்படும் என்றும், அவர்களுக்கு எதிராக ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, முட்டைக்கு அதிக கிராக்கி நிலவுவதால் வியாபாரிகள் அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்வதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.