தங்கல்ல பிரதேச பயனாளிகளுக்கு மண்ணெண்ணைக்கான விநியோக அட்டைகளை வழங்கிய அமைச்சர் டக்ளஸ்

செய்திகள் முக்கிய செய்திகள் 2

தங்கல்ல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருநாள் படகு உரிமையாளர்களுக்கு சீன அரசினால் இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு உதவியாக வழங்கப்பட்ட மண்ணெண்ணையை பயனாளிகளுக்கு வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பயனாளிகளுக்கு மண்ணெண்ணைக்கான விநியோக அட்டைகளை வழங்கி வைத்தனர்.

மேலும் தங்கல்ல பிரதேசத்தின் மீன்பிடித்துறைமுகத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று விஜயம் செய்தார்.

அங்கு துறைமுகப்பகுதிக்குள் படகுகளைச் செழுத்துவதற்கு தடையை ஏற்படுத்தும் பாரிய கல்லை அகற்றி அல்லது உடைத்து விடுமாறு அமைச்சரிடம் கோரிக்கை விடுத்த தொழிலாளர்கள் தமக்கு மண்ணெண்ணை கிடைப்பதில் காணப்படும் தாமதத்தை விரைவு படுத்தித் தந்துதவுமாறும் கோரிக்கை விடுத்தனர்.

அத்துடன் துறைமுகத்தில் உள்ளே இருக்கும் கட்டிடத்தின் கூரை பெரிதும் பழுதடைந்து கிடப்பதாகவும் அதையும் புனரமைத்துதருமாறும் கேட்டுக்கொண்டனர்.