மோரா புயலின் தாக்கம் நாளை குறைவடையும்

செய்திகள்

மோரா புயல் பங்களாதேஷ{க்குள் புகுந்துள்ளதால் நாளை (31) முதல் இலங்கையில் மழைவீழ்ச்சி மற்றும் காற்றின் வேகம் என்பன குறைவடையுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.

எவ்வாறாயினும், இன்றைய தினம்,இலங்கையின் வான்பரப்பு கருமேகங்களால் சூழ்ந்துள்ள நிலையில், இன்று இரவும் மழை மற்றும் கடும் காற்றை எதிர்ப்பார்க்க முடியுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.