படையினரின் நிகழ்வுகளுக்கு மாணவர்கள் வேண்டாம் – சிவாஜிலிங்கம்

சிறப்புச் செய்திகள் செய்திகள்

வடமாகாண பாடசாலை மாணவர்கள் படையினரின் நிகழ்வுகளில் கலந்து கொள்வதை உடனடியாக தடுக்க வேண்டுமென யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

இதற்கு வடமாகாண கல்வி அமைச்சு உடனடியாகவே நடவடிக்கை எடுப்பதாக உத்தரவாதம் கொடுத்துள்ளது.

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்றைய தினம் யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கருத்துத் தெரிவிக்கையில், பனங்காட்டுக்குள் புத்தி கூர்மை என்ற தலைப்பில் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் படையினர் நிகழ்வொன்றை நடத்தியுள்ளனர்.

இதில், மாலை 6.00 மணிக்கு பின்னர் பாடசாலை மாணவர்கள் அழைக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இராணுவம் நிகழ்வை நடத்துவதாக இருந்தால் படை முகாமுக்குள் நடத்த வேண்டும். அதற்கு பாடசாலை மாணவர்களை அழைக்க கூடாதெனத் தெரிவித்தார்.