சாம்பியன் கிண்ணக் கிரிக்கெட் இன்று ஆரம்பம்

செய்திகள் விளையாட்டு

சாம்பியன் கிண்ண கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் இன்று ஆரம்பமாகவுள்ளது.

இதற்கான பயிற்சிப் போட்டிகளில் தோல்வியடைந்தாலும் தமது அணி திடமான மனோநிலையுடன் தொடரில் இணைவதாக இலங்கை அணியின் உபுல் தரங்க தெரிவித்துள்ளார்.

பேர்மிங்ஹாமில் நியூஸிலாந்திற்கு எதிராக நேற்று நடைபெற்ற பயிற்சிப் போட்டியில் இலங்கை அணி சார்பாக உபுல் தரங்க 110 ஓட்டங்களைக் குவித்ததுடன், குசல் மென்டிஸ், டினேஷ் சந்திமால் ஆகியோர் அரைச்சதம் பெற்றுக் கொண்ட நிலையில், இலங்கை அணி 50 ஓவர்களில் 08 விக்கெட் இழப்பிற்கு 356 ஓட்டங்களைக் குவித்தது.

பதிலுக்குத் துடுப்பாடிய நியூஸிலாந்து, மார்டின் கப்தில் பெற்ற 116 ஓட்டங்களுடன் 46.1 ஓவரில் 04 விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்கைத் தொட்டது.

இதேவேளை, கடந்த 26ஆம் திகதி நடைபெற்ற இலங்கை அணியுடனான முதல் பயிற்சிப் போட்டியில் அவுஸ்திரேலியா 02 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றதும் குறிப்பிடத்தக்கது.