
பேருவளை, ஏப் 1
எரிபொருள் மற்றும் எரிவாயு நெருக்கடிக்கு தீர்வு கோரியும், மின் தடைக்கு தீர்வு கோரியும் பொதுமக்கள் பேருவளை பகுதியிலும் தற்போது ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக
செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக பேருவளை நகரில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதுடன்
வீதிப் போக்குவரத்து ஒரு வழிப் போக்குவரத்தாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.